Close

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 400 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை வழங்கினார்.

Publish Date : 16/06/2025
.

செ.வெ.எண்:-40/2025

நாள்:12.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 400 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை வழங்கினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 400 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை இன்று(12.06.2025) வழங்கினார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது :-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் குடியிருப்பவர்களுக்கு சொந்த வீடு இல்லை என்ற நிலை யாருக்கும் இருக்கக்கூடாது, அதை அகற்றிட வேண்டும், அதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு முழுவதும் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 80 சதவீதம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6,700 கட்ட அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் நடப்பு ஆண்டு இதுவரை சுமார் 3,500 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 20 ஆண்டுகளான பழுதடைந்த வீடுகளை பழுது பார்க்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் பழுதடைந்த வீடுகளை பழுது பார்க்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணை பிரப்பித்தார். தற்போது வரை ஒரு இலட்சம் வீடுகள் பழுது சீரமைக்கப்பட்டு பணிகள் முடிக்கபட்டுள்ளன.

“வீடு கட்டிப்பார் கல்யாணம் செய்து பார்“ என்று கிராமத்தில் கூறுவார்கள். வீடு கட்டுவது என்பது சாதாரண விசயம் அல்ல. கடந்த காலத்தில் நான் அமைச்சராக இருந்த போது, சுமார் 24 இலட்சம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 3400 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஒரு கிராமத்திற்கு நான் சென்றால் அக்கிராமத்தில் முதியோர் உதவித்தொகை பெற பொதுமக்கள் மனு வழங்குவார்கள். அந்த மனுக்களை உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது.

தற்போது, ரெட்டியார்சத்திரம் மற்றும் ஆத்தூர் பகுதியில் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. ரெட்டியார்சத்திரம் தொகுதியில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் வாய்கால்களை தூர் வாரப்பட்டுள்ளன. சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமத்துவம், சகோதரத்துவத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என்பதற்காகவும், அனைவரையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாம் என்றென்றும் உறுதுணையுடன் இருந்து செயல்பட வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.