Agriculture – Grievance Day Petition
செ.வெ.எண்:-27/2023
நாள்:-20.04.2023
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 28.04.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறவுள்ளது.
அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளனர்.
அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்கு முறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.
அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைக்கு தீர்வு காணலாம். கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து நபர்களும் தவறாது முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Q
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.