Close

Apprentice – Training

Publish Date : 02/05/2023

செ.வெ.எண்:-24/2023

நாள்:-17.04.2023

திண்டுக்கல் அரசு தானியங்கிப் பணிமனையில் காலியாக உள்ள கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற் பழகுநர் (APPRENTICE) 4 பயிற்சியிடங்கள் நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு 24.04.2023 அன்று நடைபெற உள்ளது.

திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சரளைப்பட்டி பிரிவு, அரசு தானியங்கிப் பணிமனையில் காலியாக உள்ள கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற் பழகுநர் (APPRENTICE) பயிற்சியிடங்கள் 4 (நான்கு) இடங்களை நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு அரசு தானியங்கிப் பணிமனை அலுவலகத்தில் 24.04.2023 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

இதில், பத்தாம் வகுப்பு(S.S.L.C) தேர்ச்சி பெற்று, ஐ.டி.ஐ.யில் கம்மியர் (மோட்டார் வாகனம்) பிரிவில் 2 வருட பயிற்சியில் (N.T.C) தேர்ச்சி பெற்று 18 வயது நிறைவு செய்த, இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாத நபர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள் அவற்றின் ஜெராக்ஸ் நகல்கள் மற்றும் தங்களது சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் அளவு போட்டோ உடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், இந்நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது என திண்டுக்கல் அரசு தானியங்கிப் பணிமனை தானியங்கிப் பொறியாளர் திரு.ச.பழனிவேல்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.