Arts and Culture Camp
செ.வெ.எண்:-10/2025
நாள்:-05.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக கலை பண்பாட்டுத்துறை ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக மல்லர்கம்பம், சிலம்பம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
கலை பண்பாட்டுத்துறை ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக ஆறு முதல் பதினாறு வயதுக்கு உட்பட்ட பள்ளிக் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கலைப்பயிற்சிகள் வழங்குதல், அவர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொணர்தல், கலைக்கல்வி வழங்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
மதுரை மண்டலத்தின் கீழ் செயல்படும் திண்டுக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தில் கிராமிய நடனம், சிலம்பம், ஓவியம் மற்றும் மல்லர்கம்பம் ஆகிய கலைகளில் 6 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு சனிக்கிழமை மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக திண்டுக்கல், தாடிக்கொம்பு ரோடு, அரசு மேல்நிலைப் பள்ளியில் 06.05.2025 முதல் 24.05.2025 வரை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மல்லர்கம்பம், சிலம்பம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாய்ப்பினை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 9790070867 என்ற அலைபேசி எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலராம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.