Collector Inspection – (Development Works) at Guziliamparai Panchayat Union
செ.வெ.எண்:-80/2025
நாள்:-30.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், வடுகம்பாடி, ஆர்.புதுக்கோட்டை, கருக்காலி ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(30.04.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், கருங்கல் ஊராட்சி, ஜக்கம்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.4.16 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகம், மேலும், ஜக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கருங்கல் ஊராட்சி, வெள்ளைப்பாறையில் மகளிர் திட்டம் சார்பில் ரூ.1.50 இலட்சம் சமுதாய முதலீட்டு நிதியின் கீழ் செயல்பட்டு வரும் தையல்(அலகு-1) மையம், கே.அணைப்பட்டி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டில் கே.அணைப்பட்டி முதல் லந்தகோட்டை ஊராட்சி வரை மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை மேம்பாட்டு பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, கருங்கல் ஊராட்சி, டி.சின்னழகுபுரம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கு கட்டுமான பணிகள், டி.சின்னழகுபுரம் அங்கன்வாடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கருங்கல் ஊராட்சி, தீண்டாக்கலில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.73.70 இலட்சம் மதிப்பீட்டில் தீண்டாக்கல் முதல் கூடலூர் வரை மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகள், தீண்டாக்கல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.9.21 இலட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் தளம் அமைக்கும் பணிகளையும், கருங்கல் ஊராட்சி, சின்னத்தம்பிப்பட்டி சல்லக்குளம் ஓடையில் பொம்மன் தோட்டம் அருகில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் காண்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணிகளையும், கருங்கல் ஊராட்சி, சின்னத்தம்பிபட்டியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உணவு தானிய கிடங்கு கட்டிடம் கட்டுமான பணிகளையும், கருங்கல் ஊராட்சி, சின்னத்தம்பிபட்டி அங்கன்வாடி மையம் மற்றும் தின்னத்தம்பிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் பள்ளியின் தடுப்பு சுவர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, வடுகம்பாடி ஊராட்சி, தளிப்பட்டியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உணவு தானிய கிடங்கு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து தளிப்பட்டி ஊராட்சி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். மேலும், புளியம்பட்டி சின்னராஜ் தனபாக்கியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையல் அறை கட்டிடம் கட்டுமான பணிகளையும், வடுகம்பட்டி ஊராட்சி புளியம்பட்டியில் மகளிர் திட்டம் சார்பில் ரூ.1.50 இலட்சம் சமுதாய முதலீட்டு நிதியின் கீழ் செயல்பட்டு வரும் தையல்(அலகு-2) மையம் மற்றும் பாரதிநகரில் மகளிர் திட்டம் சார்பில் ரூ.2.00 இலட்சம் சமுதாய முதலீட்டு நிதி மற்றும் ரூ.8.00 இலட்சம் வங்கி கடனுதவி பெற்று செயல்பட்டு வரும் செங்கல் சூளையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வேடசந்தூர் வட்டம், இ.சித்தூர் கிராமத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் தொழிற்சங்களின் கூட்டமைப்பினை பார்வையிட்டு, அங்கு அமைந்துள்ள நூற்பாலைகள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், சோப்புத்தூள் தொழிற்சாலைகள், உயில் உரம் தொழிற்சாலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பேரூராட்சி பகுதிகளில் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவுசார் மையம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, வேடசந்தூர் வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர். குஜிலியம்பாறை வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.