Collector-Tree Plantaion-Collector Inspection

செ.வெ.எண்:14/2021
நாள்:08.07.2021
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் மரக்கன்றுகள் நட்டு பாராமரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் மரக்கன்றுகள் நட்டு பாராமரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(08.07.2021) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணிகளை திண்டிமாவனம் குழுவினர் மற்றும் சில அமைப்புகள் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி, ரெண்டலபாறை, அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம் மற்றும் பொன்னிமாந்துறை ஆகிய இடங்களில் மரங்கள் வளர்க்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். மரங்களை பராமரிக்கும் பணிகள் குறித்து திண்டிமாவனக் குழுவினரிடம் கேட்டறிந்தார்.
மேலும், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதற்கு சேவை மனப்பான்மையுடன் உள்ள சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து மரங்கள் நடும் பணிகளை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடும் பணி இயக்கமாக மேற்கொள்ளப்பட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மரக்கன்றுகளை வழங்கினால் நட்டு பராமரிப்பதற்கும் மற்றும் இதுதொடர்பான பணிகளை சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்வதற்கு உதவி செய்ய விருப்பமுள்ள தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் 7598866000 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தங்கள் விபரம் மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மலரவன் மற்றும் திண்டிமாவனம் குழுவினர் உடன் இருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.