Covid-19 vaccination mega camp-11th
செ.வெ.எண்:-64/2021
நாள்:24.11.2021
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதம் இலக்கினை அடைவதற்கு ஏதுவாக 11வது முறையாக 25.11.2021 அன்று 740 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 17,30,600 நபர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 23.11.2021-ஆம் தேதி வரை 13,46,182 நபர்கள் (77.8 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். 6,89,052 நபர்கள்(39.8 சதவீதம்) இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதம் இலக்கினை அடைவதற்கு ஏதுவாக தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 10 முறை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 11-வது முறையாக மாபெரும் தடுப்பூசி முகாம்கள் 25.11.2021(வியாழக்கிழமை) அன்று 740 இடங்களில் நடத்தப்படவுள்ளது.
முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, குறிப்பிட்ட நாட்கள் கடந்து 2-வது தவணை தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் எண்ணிக்கை 23.11.2021 வரை 1,57,518 நபர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இம்முகாம்களை பயன்படுத்தி அனைத்து பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.