Close

DADWO (Tribal camp)

Publish Date : 29/04/2025

செ.வெ.எண்: 78/2025

நாள்: 28.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் வட்டத்தில் 29.04.2025 மற்றும் 30.04.2025 ஆகிய தினங்களில் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை ஆவணங்கள் மற்றும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் 29.04.2025 மற்றும் 30.04.2025 ஆகிய தினங்களில் பழங்குடியின மக்களுக்கு பிறப்புச்சான்று, இறப்புச்சான்று, சாதிச்சான்று, விதவைச்சான்று, ஆதார்அட்டை, குடும்பஅட்டை, மருத்துவகாப்பீடு அட்டை போன்ற பல அடிப்படை ஆவணங்கள் மற்றும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன்படி, 29.04.2025 அன்று கொடைக்கானல் வட்டத்தில், கும்பரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மங்களங்கொம்பு சமுதாயக்கூடம், கே.சி.பட்டி கிராம ஊராட்சி மன்ற அலுவலகம், பண்ணைக்காடு கிராம நிர்வாக அலுவலகம், கோம்பைக்காடு தனியார் தொண்டு நிறுவனக் கட்டிடம் மற்றும் 30.04.2025 அன்று பெருமாள்மலை அடுக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம், பாரதி அண்ணா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பள்ளங்கி காந்திஜி தொடக்கப்பள்ளி, போலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கும்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை ஆவணங்கள் மற்றும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே, இச்சிறப்பு முகாமில் கொடைக்கானல் பழங்குடியின மக்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.