DBCMBC-Minority Scholarship
செ.வெ.எண்:-19/2021
நாள்:08.12.2021
சிறுபான்மையினர் இன மாணவ/மாணவியர்கள் இந்திய அரசின் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாட்டில், இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர் புத்தமதத்தினர் பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் இந்திய/மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-2022-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர்/ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, இந்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பள்ளி படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 15.12.2021 வரை இறுதியாக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வருமானச் சான்று தேவையில்லை என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தினை மேற்காணும் இணையதளத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.