Decorative carts vehicle – Meeting
செ.வெ.எண்:-14/2022
நாள்:08.02.2022
வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி வருகை முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லாதா தலைமையில் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் ஒரு வாகனம் வருகின்ற 09.02.2022 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வருகை தருவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லாதா தலைமையில் இன்று(08.02.2022) நடைபெற்றது.
இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பினை போற்றி, பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் விடுதலைப்போரில் தமிழகம் என்ற தலைப்பில் 3 அலங்கார ஊர்திகள் இடம்பெற்றிருந்தன. அந்த ஊர்திகளில் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை பொதுமக்கள், இளைய தலைமுறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கண்டுகளித்திட ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு 09.02.2022 அன்று வருகை தரவுள்ளது. திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள், இளைய தலைமுறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கண்டுகளித்திட ஏதுவாக, இந்த அலங்கார வாகனத்தை பார்வையிட வரும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொது மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துத் தரவேண்டும். மேலும், மங்கள இசை, சிலம்பம் விளையாட்டு, கிராமிய கலைநிகழ்ச்சிகள் கலைக்காவிரி கல்லூரி மாணவர்களின் பரத நாட்டியம் மற்றும் நாட்டுப்;பற்றினை எடுத்துரைக்கும் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்;ச்சிகள் மேற்கொண்டு பொதுமக்கள் இந்த அலங்கார ஊர்தியை சிறப்பான முறையில் கண்டுகளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி சி.பிரியங்கா, இ.ஆ.ப,, மாவட்ட வன அலுவலர் திரு.எஸ்.பிரபு, இ.வ.ப., மாவட்ட முதன்மை கல்வி அலுவலரி திரு.சீ.கருப்புசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை, மின்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.