Election Voter Camp

செ.வெ.எண்:-12/2023
நாள்:-04.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
விட்டல்நாயக்கன்பட்டி சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், விட்டல்நாயக்கன்பட்டி இலட்சுமிபுரம் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் இன்று(04.11.2023) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்க திருத்தம் 2024-ஐ முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு(7) சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27.10.2023 அன்று வெளியிடப்பட்டது.
அதன்படி, பழனி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 128833, பெண்கள் 135014, இதரர் 55 என மொத்தம் 2,63,902 வாக்காளர்களும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,12,215, பெண்கள் 1,19,433, இதரர் 10 என மொத்தம் 2,31,658 வாக்காளர்களும், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,37,528, பெண்கள் 1,48,499, இதரர் 25 என மொத்தம் 2,86,052 வாக்காளர்களும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,18,282, பெண்கள் 1,23,336, இதரர் 14 என மொத்தம் 2,41,632 வாக்காளர்களும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,36,541, பெண்கள் 1,42,495, இதரர் 63 என மொத்தம் 2,79,099 வாக்காளர்களும், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,32,145, பெண்கள் 1,40,276, இதரர் 45 என மொத்தம் 2,72,466 வாக்காளர்களும், வேடசந்துார் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,29,939, பெண்கள் 1,36,082, இதரர் 01 என மொத்தம் 2,66,022 வாக்காளர்களும், என மாவட்டத்தில் மொத்தம் ஆண்கள் 8,95,483, பெண்கள் 9,45,135, இதரர் 213 என மொத்தம் 18,40,831 வாக்காளர்கள் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2024-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் 27.10.2023 முதல் நடைபெற்று வருகிறது. எனவே, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான படிவங்களில் விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர்(31.12.2005-ஆம் தேதி வரை பிறந்தவர்கள்) சேர்ப்பதற்கு படிவம் – 6, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம்-7, பிழைத்திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற படிவம் – 8 ஆகிய படிவங்களில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் வாக்காளர்கள் இணையவழி (Online) மூலமாக நேரடி விண்ணப்பம் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தின் www.nvsp.in, என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line” என்ற கைபேசி செயலி மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண். 1950-ல் அழைத்து விபரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் இன்று(04.11.2023) மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து நாளை(05.11.2023) ஞாயிற்றுக்கிழமை மற்றும் 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. வாக்காளர்கள் விண்ணப்பத்தினை தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேரில் வழங்கி பயன்பெறலாம்.
எனவே, பொதுமக்கள் மேற்கண்ட சிறப்பு முகாம் நாட்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரிபார்த்துக் கொள்ளவும், புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய விரும்புவர்கள் இவ்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, ஆத்துார் வட்டாட்சியர் திரு.வடிவேல் முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.