Election Voter Camp
செ.வெ.எண்:-06/2023
நாள்:-02.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2024-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் 27.10.2023 முதல் நடைபெற்று வருகிறது.
எனவே, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்யஈ பெயர் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான படிவங்களில் விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் (31.12.2005-ஆம் தேதி வரை பிறந்தவர்கள்) சேர்ப்பதற்கு படிவம் – 6, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம்-7, பிழைத்திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற படிவம் – 8 ஆகிய படிவங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் வாக்காளர்கள் இணையவழி (Online) மூலமாக நேரடி விண்ணப்பம் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தின் www.nvsp.in, என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line” என்ற கைபேசி செயலி மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண். 1950-ல் அழைத்து விபரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இச்சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
எனவே, பொதுமக்கள் மேற்கண்ட சிறப்பு முகாம் நாட்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரிபார்த்துக் கொள்ளவும், புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய விரும்புவர்கள் இவ்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.