Employment-TNPSC Group-II( Free Training Classes)
செ.வெ.எண்:-52/2022
நாள்:23.11.2022
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி–II காலிப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.v
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி–II (TNPSC Group-II)
காலிப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வுக்கான (Main) இலவசப் பயிற்சி வகுப்புகள் 24.11.2022 அன்று காலை 10.30 மணியளவில் துவங்கப்பட உள்ளன. இப்பயிற்சியானது திறன்மிக்க வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது, மேலும் மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன.
எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி–II (TNPSC Group-II) காலிப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் இந்த அரியவாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.