Ex-serviceman – GDP
செ.வெ.எண்:-49/2021
நாள்:19.11.2021
முன்னாள் படைவீரர்கள்/சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 24.11.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள்ஃசார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் 24.11.2021 அன்று பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கை மனுவினை இரட்டைப் பிரதிகளில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.30 மணிக்குள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் புனுP ஆன்லைனில் பதிவு செய்து வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.