Ex-serviceman – PMSS Scholarship
செ.வெ.எண்:-36/021
நாள்:16.11.2021
பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2021-22 கல்வியாண்டில் தொழிற்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பட்டப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2021-22 கல்வியாண்டில் தொழிற்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பட்டப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் பயன்பெறும் வகையில் முன்னாள் படைவீரர்களின் பெண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.3,000 (ஆண்டுக்கு ரூ.36,000) மற்றும் ஆண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.2,500 (ஆண்டுக்கு ரூ.30,000) என்ற விதத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை, முன்னாள் படைவீரர்கள் நேரடியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்திட ஏதுவாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளம் www.ksb.gov.in என்ற முகவரியில் 30.11.2021-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, அனைத்து ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.