Exwel Grievance Day Petition
செ.வெ.எண்:-70/2025
நாள்:19.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 26.06.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26.06.2025 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கை மனுவினை இரட்டைப் பிரதிகளில் முற்பகல் 9.00 மணிமுதல் 10.00 மணிக்குள் மாவட்டஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.