Close

Exwel Kakkum Karangal Scheme camp

Publish Date : 26/02/2025
.

செ.வெ.எண்:-78/2025

நாள்:-25.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

“முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டம் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(25.02.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சுதந்திர தின உரையின்போது, முன்னாள் படைவீரர் நலனுக்காக “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்கள். அதன்படி, இத்திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், மீதமுள்ள கடன் தொகைக்கு 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும், திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். v

முன்னாள் படைவீரர்கள் விதவையர்கள், இராணுவப் பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள்(வயது வரம்பு-55), முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள், மகன் மற்றும் முன்னாள் படைவீரர்களின் விதவையர்களின் திருமணமாகாத மகள்கள், மகன்கள் ஆகியோருக்கு வயது வரம்பு – 25 வரை உள்ளவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இத்திட்டத்தின் மூலம் கடனுதவி பெற www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (கூ.பொ) திருமதி ச.சுகுணா, முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் திரு.தி.செல்வம், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் குழு உறுப்பினர்கள் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரு.கமலக்கண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் திரு.அருணாச்சலம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ச.பிரபாவதி, கிளைமேலாளர்(டான்சிட்கோ) திரு.ஏ.பிரான்சிஸ், குறு, சிறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களின் சங்க தலைவர் திரு.அண்ணாத்துரை, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மாவட்ட செயல் அலுவலர் திருமதி சுதாதேவி ஆகியோர் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் எவ்வாறு பயனடைவது என்பது பற்றி விளக்கங்கள் அளித்தனர்.

இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.