Close

Fisheries Civil Services Coaching

Publish Date : 06/11/2023
.

செ.வெ.எண்:-04/2023

நாள்:-02.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

இந்திய குடிமைப் பணிகளில் சேர்வதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கு மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் அகில இந்திய குடிமை பணி பயிற்சி மையம் இணைந்து நடத்தி வருகிறது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவ நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களான பட்டதாரி இளைஞர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி(Guidelines) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 18.11.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் பூர்த்தி செய்து திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்திட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, “மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 80 அடி ரோடு, நேரூஜி நகர், திண்டுக்கல் – 624 001” என்ற முகவரியில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை நேரிலோ அல்லது தொலைபேசி எண்(0451 – 2900148) வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.