Close

Green Award 2024-2025

Publish Date : 25/02/2025

செ.வெ.எண்:-72/2025

நாள்:-24.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

“பசுமை சாம்பியன் விருது” பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சர் அவர்கள் 03.09.2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த நிதியிலிருந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு “பசுமை சாம்பியன் விருது” வழங்கப்படுகிறது. அதன்படி, 2021-2022-ஆம் ஆண்டு முதல் ரூ.1.00 கோடி செலவில் விருது பெறுபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்கப்படுகிறது.

அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) 2023-24ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை வழங்க முன்மொழிந்துள்ள

1. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி

2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு

4. பசுமை தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்

5. நிலைத்தகு வளர்ச்சி

6. திடக்கழிவு மேலாண்மை

7. நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு

8. காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை

9. காற்று மாசு குறைத்தல்

10. பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை

11. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு

12. கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை

13. பிற பிளாஸ்டிக் கழிவு தொடர்பான திட்டங்கள்

ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனி நபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த தனி நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in ) பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 15.04.2025-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்விருதுக்கு விண்ணப்பிக்க மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை 8056042304 என்ற கைப்பேசி எண் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.