Close

jeevan emu -Vedasandur

Publish Date : 07/05/2025

செ.வெ.எண்:-19/2025

நாள்: 06.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

ஜீவன் ஈமு கேர் இந்தியா (பி) லிட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் 29.05.2025 அன்று பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது – மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வந்த ஜீவன் ஈமு கேர் இந்தியா (பி) லிட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான வேடசந்துார் வட்டம், பாகாநத்தம் கிராமம் (புல எண் 1064/14 –விஸ்தீரனம் 4.47 ஏக்கர் – குறும மதிப்பு ரூ.8,96,950) புலங்களில் உள்ள நிலம், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்புச் சட்டம் 1997 இன் கீழ் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் 29.05.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் வேடசந்துார் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த சொத்துக்கள் மற்றும் ஏல நிபந்தனைகள் தொடர்பான விபரங்கள் திண்டுக்கல் மாவட்ட இணையதளத்தில்(www.dindigul.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர், இதுதொடர்பான விபரங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழனி சார் ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். நிறுவனத்திற்கு சொந்தமான மேற்படி அசையா சொத்தினை நிலையில் உள்ள விதத்தில் உள்ளவாறே ஏலம் விடப்படும், என திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.