Kodaikanal-CCTV Camera

செ.வெ.எண்:-23/2025
நாள்:-07.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் ஏரியை சுற்றி நவீன கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரியை சுற்றிலும் காணொளி திரையுடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் இன்று(07.05.2025) திறந்து வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்குள்ள கொடைக்கானல் ஏரியை சுற்றி 4.5 கி.மீட்டர் துாரம் கொண்ட பகுதியில் 68 நவீன கண்காணிப்பு கேமராக்கள் காணொளி திரையுடன் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் திரு.பா.செல்லத்துரை, துணைத்தலைவர் திரு.கே.பி.என்.மாயக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் திரு.ப.சத்தியநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.