Close

Kudaganar Dam Water Open

Publish Date : 28/04/2025
.

செ.வெ.எண்: 73/2025

நாள்: 27.04.2025

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அழகாபுரியில் உள்ள குடகனாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசன சாகுபடிக்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், குடகனாறு அணையிலிருந்து வவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசன சாகுபடிக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(27.04.2025) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வேளாண் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, குடகனாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, வேடசந்துார் வட்டம், அழகாபுரியில் உள்ள குடகனாறு அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று(27.04.2025) முதல் 90 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

திண்டுக்கல் மாவாட்டம், வேடசந்தூர் வட்டம், குடகனாறு அணையிலிருந்து, வலது மற்றும் இடது பிரான கால்வாய் மூலம், திண்டுக்கல் மாற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் 27.04.2025 முதல் 25.07.2025 வரை 90 நாட்களில் 45 நாட்களுக்கு (7 நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறப்பும், 7 நாட்கள் தண்ணீர் நிறுத்தம்) வலது பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 40 கன அடி வீதம் 155.52 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மற்றும் இடது பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 14 கன அடி வீதம் 54.43 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 209.95 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் 4262.78 ஏக்கர் நிலங்கள் மற்றும் கரூர் மாவட்டத்தில் 4737.22 ஏக்கர் நிலங்கள் ஆக மொத்தம் 9000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த விவசாயிகள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பழனி நங்காஞ்சியாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் திரு.பாலமுருகன், வேடசந்தூர் குடகனாறு உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் திரு.தனசேகரன், வேடசந்தூர் வட்டாட்சியர் திரு.சுல்தான், அழகாபுரி குடகனாறு அணை பிரிவு உதவி பொறியாளர் திரு.மகேஷ்வரன் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் உடனிருந்தனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.