Monday Grievance Day Petition Meeting (03/01/2022)

செ.வெ.எண்:-06/2022
நாள்:03.01.2022
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (03.01.2022) நடைபெற்றது. இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 325 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுகிறது.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மேலும், பெறப்பட்ட மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி மாவட்டம், முசிறியில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கேரம் போட்டியில், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எம்.கபின்சியா மற்றும் டி.யோகலட்சுமி ஆகியோர் 18 வயதிற்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் முதலிடமும், இதே பள்ளி மாணவி ஆர்.மோனிஷா ஒன்றையர் பிரிவில் இரண்டாமிடமும், திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஏ.சுகுமாரன் மற்றும் எஸ்.பூபேஸ்பிரசாத் ஆகியோர் 10 வயதிற்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றனர. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சி.மாறன், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளையோர் நலன் அலுவலர் திருமதி எம்.ரோஸ் பாத்திமா மேரி, உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.