Close

NEET Exam centers Inspection

Publish Date : 05/05/2025
.

செ.வெ.எண்:-08/2025

நாள்:-04.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

நீட் தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(04.05.2025) நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கை நுழைவுத்தேர்வு(NEET) மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு(NEET) இன்று(04.05.2025) திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெற்றன.

அதன்படி, சின்னாளப்பட்டி தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 360 தேர்வர்களும், காந்திகிராம் பிஎம்ஸ்ரீ கேந்திரா வித்யாலயா பள்ளி தேர்வு மையத்தில் 480 தேர்வர்களும், காந்திகிராம் ஊரக பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்வு மையங்களில் குருதேவ் அகாடமிக் வளாகத்தில் 263 தேர்வர்களும், தாகூர் வளாகத்தில் 480 தேர்வர்களும், நத்தம் வட்டம், என்.கோவில்பட்டி துரைகமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 480 தேர்வர்களும், திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480 தேர்வர்களும், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 480 தேர்வர்களும் என ஆக மொத்தம் 3023 தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 987 மாணவர்களில் 945 பேர் தேர்வு எழுதினர். 42 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 2036 மாணவிகளில் 1957 மாணவிகள் தேர்வு எழுதினர். 79 மாணவிகள் தேர்வு எழுதவில்லை. ஆக மொத்தம் 3023 தேர்வர்களில் 2902 பேர் தேர்வு எழுதினர். 121 பேர் தேர்வு எழுதவில்லை, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததார்.

இந்த ஆய்வின்போது, துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.