NEET Exam Centers Inspection

செ.வெ.எண்:-07/2025
நாள்:-03.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கு அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கு(NEET) அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(03.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு(NEET) 04.05.2025 அன்று நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கை நுழைவுத் தேர்வுக்காக 7 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சின்னாளப்பட்டி தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 360 தேர்வர்களும், காந்திகிராம் பிஎம்ஸ்ரீ கேந்திரா வித்யாலயா பள்ளி தேர்வு மையத்தில் 480 தேர்வர்களும், காந்திகிராம் ஊரக பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்வு மையங்களில் குருதேவ் அகாடமிக் வளாகத்தில் 263 தேர்வர்களும், தாகூர் வளாகத்தில் 480 தேர்வர்களும், நத்தம் வட்டம், என்.கோவில்பட்டி துரைகமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 480 தேர்வர்களும், திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480 தேர்வர்களும், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 480 தேர்வர்களும் என ஆக மொத்தம் 3023 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
தேர்வு மையங்களில், தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர், காற்றோட்டமான அறைகள், இருக்கை வசதி, மின் வசதிகள், கழிப்பறை வசதிகள், போக்குவரத்து வசதிகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின்போது, துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.