ollector inspection-Sanarpatti Panchayat Union

செ.வெ.எண்:-26/2025
நாள்:-08.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(08.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், கணவாய்ப்பட்டி ஊராட்சி, ஒத்தக்கடை கிராமத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) நிதியுதவியுடன் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் தென்னைநாரிலிருந்து கயிறு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு கூடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் கணவாய்ப்பட்டி நியாயவிலைக்கடையில் பொருட்கள் விநியோகம், தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கணவாய்ப்பட்டி நர்சரியில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து வேம்பார்பட்டி ஊராட்சி, கோபால்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரித்தல் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கோபால்பட்டியில் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்படும் சப்பாத்தி, தோசை மாவு மற்றும் இடியாப்பம் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் தி.பஞ்சம்பட்டி ஊராட்சி, கொசவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை முறைகள், அங்குள்ள பிரசவ அறை, வார்டு, உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி சுமதி, திரு.இளையராஜா மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.