Pensioner Grievance Day
செ.வெ.எண்:-33/2019 நாள்:19.06.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 19.07.2019 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சென்னை ஓய்வூதிய இயக்குநர் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.
ஓய்வூதிய பலன்கள் தொடர்பான குறைகளை, ஓய்வூதியதாரர்கள் தங்களின் இருப்பிட முகவரி, கடைசியாக பணிபுரிந்த துறை / அலுவலகம், ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதிய கொடுப்பாணை எண், பெறப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்கள் மற்றும் யாரிடம் நிலுவையில் உள்ளது, நிலுவைக்கான காரணம் உள்ளிட்ட அனைத்து விபரங்கள் மற்றும் தங்கள் தொலைபேசி / கைபேசி எண்களுடன் (இரு பிரதிகளில்) 10.07.2019-ம் தேதிக்குள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அவர்களிடம் விண்ணப்பித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.