Close

Pledge – Abolition of Untouchability

Publish Date : 04/02/2025
.

செ.வெ.எண்:-69/2025

நாள்:-30.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி அவர்கள் தலைமையில் அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி அவர்கள் தலைமையில் இன்று(30.01.2025) நடைபெற்றது.

”இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்” என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி அவர்கள் வாசிக்க அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, இந்திய நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் அலுவலர்கள் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிகளில், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.