திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், பாளையம், கரிச்சிகாரன்பட்டி கபடி பயிற்சியாளர் மாரடைப்பால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 இலட்சம் நிதியுதவி வழங்க மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

செ.வெ.எண்:-46/2023
நாள்:-22.02.2023
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், பாளையம், கரிச்சிகாரன்பட்டி கபடி பயிற்சியாளர் மாரடைப்பால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 இலட்சம் நிதியுதவி வழங்க மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மாரடைப்பால் உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் தாயார் திருமதி மாரியம்மாளிடம் ரூபாய் இரண்டு இலட்சம் நிதியுதவிக்கான காசோலையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், குளித்தலை குறுவட்டம், சத்தியமங்கலம் கிராமம் கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்கள் இடையேயான கபடி போட்டி (ஊர் சார்ந்த தனி விளையாட்டு குழு) விளையாட்டிற்கு வந்திருந்த சிறுவர்களை அழைத்து வந்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், பாளையம் அஞ்சல் கரிச்சிகாரன்பட்டியைச் சேர்ந்த பயிற்சியாளர் திரு.மாணிக்கம் த/பெ தங்கவேல் (வயது 26) என்பவர் சிறிது நெஞ்சு வலி இருந்தும் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவரை அய்யர்மலை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகாம் அலுவலகத்தில் உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் தாயார் திருமதி மாரியம்மாளிடம் இரண்டு இலட்சம் ரூபாய் காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி ஆர்.ஏ.பிரியங்கா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.