Tamilvalachi Dept

செ.வெ.எண்: 02/2025
நாள்: 01.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :-
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ”தமிழ் வார விழா ” கொண்டாடப்பட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சட்ட சபையில் அறிவித்துள்ளார்கள். எனவே, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ”தமிழ் வார விழா” கொண்டாடப்படுகிறது. பெற்றோர்கள் எந்த அளவிற்கு பாசத்தை ஊட்டி குழந்தைகளை வளர்க்கின்றார்களோ அந்த அளவிற்கு தமிழ் மொழியின் மீது உள்ள பற்று மற்றும் ஆர்வத்தையும் வழங்குகின்றனர்கள். தமிழ்நாடு மற்றும் வெளி நாடுகளிலும் தமிழ் மொழியின் மீது உள்ள பற்று குறையாத அளவிற்கு வாழ்க்கையின் அடித்தளமாக இருப்பது தமிழ் மொழியாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலசை்சர் அவர்கள் குழந்தைகளுக்கு தமிழில் பேசும் வகையில் அதிகமான வாய்ப்புகளும் வசதிகளும் ஏற்படுத்துவதற்கு தமிழ் இணையதளம் மூலமாக தமிழ் பேசுவதற்கான ஒரு புதிய இணைய தளத்தை உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். தமிழிற்கு மற்ற மாநிலங்களில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் 19-ஆம் நூற்றாண்டில் பழங்கால தமிழிலிருந்து புதிய பாதையை நோக்கி செல்கிறது என்றால் அவர்களின் கவிதைகள் அதற்கு காரணம் தான். பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள தயார் செய்வதற்கு அனைவருக்கும் மிகவும் பயனுள்ள நூலாக அமைந்துள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ”தமிழ் வார விழா ” கொண்டாடப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து அனைத்துத் துறை அரசு அலுவலர்கள்/ பணியாளர்களுக்கும் ஏப்ரல் 30 ஆம் நாளன்று மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டரங்கில் பேச்சுப்போட்டி, கையெழுத்துப்போட்டி, தமிழ் இலக்கியங்கள் தொடர்பான கதை சொல்லும் போட்டி தமிழ் புதினங்கள்/ கவிதை வாசிப்புப் போட்டி போன்ற போட்டிகள் நடைப்பெற்றன. கையெழுத்துப் போட்டியில் முதல் பரிசு சி.வீரமணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், இரண்டாம் பரிசு சே.சங்கரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மூன்றாம் பரிசு நா.மீனாட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தமிழ் இலக்கியங்கள் தொடர்பான கதை சொல்லும் போட்டியில் முதல் பரிசு ரா.ஜெயதுரை, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இரண்டாம் பரிசு அ.ச.வு.சாமி, புனித மரியன்னை மேனிலைப் பள்ளி, மூன்றாம் பரிசு பா. தங்கம், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் அலுவலகம், தமிழ் புதினங்கள் / கவிதை வாசிப்புப் போட்டியில் முதல் பரிசு அ.சந்தன மேரி கீதா, மாவட்ட வழங்கல் அலுவலகம், இரண்டாம் பரிசு சே.பிரின்ஸி பழனி ஊராட்சி ஒன்றியம், பெ.சத்யா, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேச்சுப் போட்டியில் சே.பிரின்ஸி பழனி ஊராட்சி ஒன்றியம், இரண்டாம் பரிசு மா.இராஜ்குமார் வட்டார வளமையம், மூன்றாம் பரிசு அ.ச.அ.சாமி, புனித மரியன்னை மேனிலைப் பள்ளி திண்டுக்கல் ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், தமிழ்வளர்ச்சித்துறை (மு.கூ.பெ) திருமதி ஜ.சபீர்பானு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.ஜெகவீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.