Close

The Hon’ble DCM VC -The Hon’ble Rural Development minister-sports

Publish Date : 06/05/2025
.

செ.வெ.எண்:-12/2025

நாள்:-05.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ஆத்தூர் வட்டம், சீவல்சரகு மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டம், கேதையறும்பு ஊராட்சி ஆகிய இடங்களில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணிகளுக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், சீவல்சரகு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை, நேரு விளையாட்டு அரங்கம், சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இன்று(05.05.2025) நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுகளை 39 நபர்களுக்கு வழங்கி, திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மைதானம் வளாகத்தில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை வளைகோல்பந்து மைதானம், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு மைதானம் வளாகத்தில் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், மதுரை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் ரூ.8.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம் ஆகியவற்றை திறந்து வைத்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், மதுரை, கடலூர், தருமபுரி, நாகப்பட்டினம், நாமக்கல், திண்டுக்கல்(ஆத்தூர் வட்டம், சீவல்சரகு மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டம், கேதையறும்பு ஊராட்சி ஆகிய இடங்களில்) தஞ்சாவூர், திருப்பூர், இராமநாதபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் 18 முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத்தொடர்ந்து. மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சீவல்சரகு கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

அதன் ஒருபகுதியாக, திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு கிராமத்தில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் “முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்“ அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேபோல் ஒட்டன்சத்திரம் வட்டம், கேதையறும்பு ஊராட்சியிலும் “முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்“ அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

சீவல்சரகு கிராமத்தில் சிறு விளையாட்டரங்கத்தில் 400 மீட்டர் தடகள ஓடுதளம், கால்பந்து மைதானம், கையுத்துப்பந்து மைதானம். கூடைப்பந்து மைதானம், கோ-கோ மைதானம், கபாடி மைதானம், பார்வையாளர்கள் அமரும் இடம்(Gallery), விளையாட்டு உபகரணங்கள் வைப்பு அறை, அலுவலக அறை மற்றும் உடைமாற்றும் அறை, கழிப்பறை வசதி மற்றும் மின்வசதி போன்றவை அமைக்கப்பட உள்ளது.

மேலும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் 2024-25 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் 38 மாவட்டங்களிலும் ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் (STAR ACADEMY) வெவ்வேறு விளையாட்டுக்களுக்கு அமைத்திட அறிவிக்கப்பட்டதின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு இறகுப்பந்து விளையட்டிற்கான மாவட்ட பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமிற்கு 20 மாணவர்கள், 20 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த மாணவ, மாணவிகளுக்கான பயிற்சி முகாமினை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இன்று(05.05.2025) தொடங்கி வைத்துள்ளார்கள்.

தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாதத்தில் 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி, விளையாட்டு உங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.இரா.சிவா, துறை அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.