The Hon’ble Food and Civil Supply Minister – Education – Oddanchatram

செ.வெ.எண்:-01/2025
நாள்:-02.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரத்தில் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் இன்று(02.06.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கல்வி மற்றும் சுகாதாரம் இவை இரண்டும் தனது இரண்டு கண்கள் என்று கூறி எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு சுமார் ரூ.47,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மேலும் உயர் கல்வித் துறைக்கு சுமார் ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 14 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிகாகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் இல்லம் தேடி கல்வி, நான்முதல்வன் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளியில் இடைநிற்றல் இல்லாத வகையில் அனைவரையும் பள்ளியில் சேர்க்க நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒன்றிய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் 54 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
மேலும், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில், ரெட்டியார்சத்திரத்தில் உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கூட்டுறவுத்துறை சார்பில் ஆத்துாரில் கூட்டறவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பழனியில் சித்தா கல்லுாரி, குஜிலியம்பாறையில் தொழிற்பயிற்சி நிலையம், கொடைக்கானலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு மேலாண்மை இணையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவியள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கெள்ள வேண்டும்.
மாணவ, மாணவிகளின் குறிக்கோள் வானளாவிய அளவில் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை, குறிக்கோள், விடா முயற்சி, கடின உழைப்புடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், விளையாட்டுத் துறை மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் 84 வீரர், வீராங்கனைகளுக்கு அரசுப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் கேதையுறும்பு ஆகிய பகுதியில் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் ஒட்டன்சத்திரம் பகுதி பெண்கள் கபடி அணி கடந்த 8 ஆண்டுகளாக முதலிடம் பெற்று வருகிறது.
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள், 234 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, குடிநீர், கழிப்பறை, வகுப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்க வழிவகை ஏற்படுத்தும் வகையில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் சேர 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஏராளமான அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தொழிற்கல்வி படிக்கும் வாய்ப்பை பெற்று பயனடைந்துள்ளனர்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 2006-ல், ஆசியாவிலேயே மிகப்பெரிய நுாலகத்தை தொடங்கி வைத்தார்கள். அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மதுரையில் ரூ.165.00 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய நுாலகத்தை தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் பெரிய நுாலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக இந்த நுாலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நடப்புக் கல்வியாண்டில் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், டேப் வழங்க அனுமதியளித்து, சுமார் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
கல்வி மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக்கொள்வதுடன், பெற்றோருக்கும், பள்ளிக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.க.திருமலைச்சாமி, துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி உஷா, மாவட்ட கல்வி அலுவலர்(பழனி) திருமதி பரிமளா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திரு.பிரிட்டோ, ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ், வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.