The Hon’ble Rural Development Minister – Patta Distribution

செ.வெ.எண்:-21/2025
நாள்:-07.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை இன்று(07.05.2025) வழங்கினார்.

.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசு. அதை நிலைநாட்டிடும் வகையில் அரசின் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், குட்டத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மைலாப்பூர் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் பட்டா கேட்டு அளித்த கோரிக்கைகள் நிலுவையில் இருந்து வந்தன. இந்த கோரிக்கை மனுக்கள் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உத்தரவின்பேரில், 35 குடும்பத்தினருக்கு இன்று(07.05.2025) பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பட்டா, வீடு கேட்டு வரும் எந்தவொரு கோரிக்கை என்றாலும் அவற்றை விரைந்து நிறைவேற்றிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 306 கிராம ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளில் இருந்து பெறப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலைக் கிராமமாக இருந்தாலும், வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களாக இருந்தாலும் அதில் உள்ள இடையூறுகளை அகற்றி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம், போதைமலையில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம்ட, ஆடலுார் அருகே உள்ள பூமலை கிராமத்திற்கு சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தப் பகுதி விவசாயிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர். அதேபோல், கொடைக்கானல் வட்டம், வெள்ளகவி மலைக்கிராமத்திற்கு சாலை வசதி அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது, என மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.