Close

The Hon’ble Rural Development minister-Vaigai Dam water release

Publish Date : 16/06/2025
.

செ.வெ.எண்:-48/2025

நாள்:-15.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. ஐ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் ஆகியோர் வைகை அணையிலிருந்து இரு போக பாசனத்தின் முதல் போக விவசாய பரப்பிற்கு பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்தார்கள்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் ஆகியோர் தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து இரு போக பாசன பகுதியில் முதல் போக விவசாய பரப்பிற்கு பாசனத்திற்கான தண்ணீரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் முன்னிலையில் இன்று (15.06.2025) திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியின்போது, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப்பகுதியில் இரு போக பாசனப் பகுதியில் முதல் போக பாசனத்திற்கு இன்று(15.06.2025) தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் முதல்போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணையிலிருந்து தண்ணீர் விநாடிக்கு 900 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் இன்று முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 6,739 மில்லியன் கன அடி நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 1,797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 16,452 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட 26,792 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

எனவே, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களை சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.என்.இராமகிருஷ்ணன்(கம்பம்), திரு.கே.எஸ்.சரவணக்குமார்(பெரியகுளம்), திரு.ஆ.மகாராஜன்(ஆண்டிபட்டி), திரு.ஆ.வெங்கடேசன்(சோழவந்தான்), உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., செயற்பொறியாளர்கள் திரு.ந.பாரதிதாசன், (பெரியாறு வைகை வடிநிலக் கோட்டம்), திரு.சிவபிரபாகர் (பெரியாறு பிரதான கால்வாய்) மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.