TOOL & DIE (ADMISSION)
செ.வெ.எண்:-77/2025
நாள்:-26.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
அரசு கருவி பொறியியல் பயிலகத்தில் இயந்திரவியல் பட்டய படிப்பு பயில சேர்க்கை நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழக அரசின் தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டின்கீழ் திண்டுக்கல்லில் இயங்கி வரும் கருவி பொறியியல் பயிலகத்தில் வேலை வாய்ப்பு சார்ந்த அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கழகத்தால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட மூன்றாண்டு இயந்திரவியல் (கருவி மற்றும் அச்சு) பட்டய படிப்பு 1982 ஆண்டு முதல் தமிழக அரசு விதிமுறைகளின்படி கல்வி கட்டண சலுகை, கல்வி உதவித்தொகை, பேருந்து கட்டண சலுகை ஆகிய சலுகைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிலகத்தில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டய படிப்பு பயில சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மேலும், இது குறித்து விவரங்களுக்கு முதல்வர், கருவி பொறியியல் பயிலகம் எஸ்.ஆர்.மில்ஸ் ரோடு, திண்டுக்கல்-624003 என்ற முகவரிக்கு நேரில் அல்லது 0451-2471301 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.