ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/08/2026
திண்டுக்கல் மாவட்டம் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.செல்வம் அவர்கள், மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் சார்பில், வேடசந்தூர், வடமதுரை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தாடிக்கொம்பு, எரியோடு பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். [PDF 73KB]

