பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – நலத்திட்ட உதவிகள்
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.PDF [62 KB]
மேலும் பலமாவட்ட கல்வி ஆய்வு” கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ”மாவட்ட கல்வி ஆய்வு” கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. PDF [53 KB]
மேலும் பலதனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 29.05.2026-அன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப. அவர்கள் தகவல். [PDF 61KB]
மேலும் பலகல்பனா சாவ்லா விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026திண்டுக்கல் மாவட்டம் 2026-ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 55KB]
மேலும் பலசமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவன விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026திண்டுக்கல் மாவட்டம் சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 66KB]
மேலும் பலமகளிர் விடுதிகள் இணையதளத்தில் இ-சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து உரிமம் பெறலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026<p class="text-justify"திண்டுக்கல் மாவட்டம் சமூகநலத்துறையின் கீழ் பணிபுரியும் மகளிர் விடுதிகளை இணையதளத்தில் இ-சேவை மையம் மூலமாக பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 68KB]
மேலும் பலதற்காலிக சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (TNCDW), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM), திண்டுக்கல் மாவட்ட இயக்க மேலாண்மை (DMMU) அலகிற்குட்பட்ட கீழ்க்காணும் வட்டார இயக்க மேலாண்மை அலகில் (BMMU) கிராமபுற பகுதிகளில் காலியாகவுள்ள தற்காலிகப்பணியான சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் (Community Bank Co-ordinator) பணியிடத்திற்கு நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. [PDF 109KB]
மேலும் பல2026–2027 கல்வியாண்டு கல்லூரி சேர்க்கைக்காக முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கு சார்ந்தோர் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026முன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு கல்லூரி படிப்புகளில் சேர்ந்திட சார்ந்தோர் சான்று வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் இச்சான்றினை உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திண்டுக்கல் மூலம் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். [PDF 47KB]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 64KB]
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.05.2026 அன்று நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 29.05.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 51KB]
மேலும் பலகொடைக்கானல் வனத்துறையின் கீழ் உள்ள சுற்றுலா தளங்களை கட்டணமின்றி பார்வையிடலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கொடைக்கானல் வனத்துறையின் கீழ் உள்ள சுற்றுலா தளங்களை 31.05.2026 வரை கட்டணம் இன்றி கண்டுகளிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 46KB]
மேலும் பலவண்டல் மண்ணிற்கு இணையவழி அனுமதி வழங்கும் அதிகாரம் வட்டாட்சியர்களுக்கு வழங்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026வண்டல் மண் அனுமதியானது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களே, இணையவழியில் அனுமதி வழங்கும் வகையில் அரசாணை எண்-14, இயற்கை வளங்கள் (எம்எம்சி1) துறை, நாள்:12.06.2024-ன்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. [PDF 54 KB]
மேலும் பலகொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர்கண்காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026திண்டுக்கல் மாவட்டம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர்கண்காட்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 20.05.2026-அன்று தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது [PDF 63KB]
மேலும் பலபுதிய சந்தை வளாகத்தில் 108 கூடுதல் கடைகள் அமைக்கும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் புறநகர் பைபாஸ் மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் புதிய தரகு மண்டி வணிக வளாகத்தில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் 108 கடைகளின் கட்டிடப் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார். [PDF 49KB]
மேலும் பலஇலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பல்வேறு பகுதிகளில் வருகின்ற 26.05.2026 முதல் 31.052026 வரை செல்லப்பிராணிகளுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 41KB]
மேலும் பலஅரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடக்கம் – 2026 சேர்க்கை அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2026-ம் ஆண்டு சேர்க்கை அறிவிப்பு-2026ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 16.05.2026 முதல் 03.06.2026 வரை விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நான்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள Course விவரங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள் பற்றி அறிய கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. [PDF 228KB]
மேலும் பலவேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. [PDF 46KB]
மேலும் பலஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவச் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026<p class="text-justify"திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவச் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொணடார். [PDF 81KB]
மேலும் பலபள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026திண்டுக்கல் மாவட்டம் 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. [PDF 62KB]
மேலும் பலஇலவச வேலைவாய்ப்புப் பதிவு மற்றும் தொடர்புடைய சேவைகள்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவித கட்டணமின்றி வழங்கப்படுகிறது. மேலும், மேற்சுட்டிய அனைத்து சேவைகளையும் www.tnvelaivaaippu.gov.in நேரலையில் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் அளவில் செய்துகொள்ள வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது. [PDF 68KB]
மேலும் பலகொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர்க்கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர்க்கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 67KB]
மேலும் பலகுஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 224KB]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்ட ஐ.டி.ஐ-களில் 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026திண்டுக்கல் மாவட்டம் ஐ.டி.ஐ-களுக்கான – 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 121KB]
மேலும் பலகொடைக்கானலில் 63-ஆவது மலர்க்காட்சி மே 20 முதல் 31 வரை 12 நாட்கள் கோலாகலம்.
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026கோடைகாலத்தில் இளவரசியாம் மலைகளின் கொடைக்கானலின் அழகினை கண்டு களிக்க வருகை புரியும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் ஆண்டுதோறும் மலர்க்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 63-ஆவது மலர்க்காட்சி வரும் 20.05.2026-ஆம் தேதி முதல் 31.05.2026 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. [PDF 44KB]
மேலும் பலஐ.டி.ஐ-களில் 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026திண்டுக்கல் மாவட்டம் ஐ.டி.ஐ-களுக்கான – 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 91KB]
மேலும் பலஒப்பந்தப்புள்ளிகள் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள துறைக்குளங்களான மாவூர் அணை, சிறுவன்குளம், நீலமலைக்கோட்டை, தாமரைக்குளம் நரசிங்கபுரம், ரெங்கசமுத்திரக்குளம், புல்வெட்டிக்குளம் மற்றும் அத்திக்குளம் ஆகிய 7 கண்மாய்கள் மற்றும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை குளங்களான காட்டுப்பெரியகுளம், பனங்குடி கண்மாய், ஊமச்சிகுளம், ஊமைசேர்வார்குளம், பங்காருசமுத்திரம் குளம் மற்றும் பாறைச்சின்னக்குளம் ஆகிய 6 கண்மாய்கள் மற்றும் குறுகிய கால பாசனக்குளங்களான பாப்பாக்குளம், ஆயக்குடி மற்றும் சிறுநாயக்கன்குளம் ஆகிய 2 குளங்கள் ஆகமொத்தம் 15 குளங்களுக்கும் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட […]
மேலும் பலயு.பி.எஸ்.சி. தேர்வில் ஐ.ஏ.எஸ். பணியிடத்திற்கு தேர்வானவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வில் ஐ.ஏ.எஸ் பணியிடத்திற்கு தேர்வான திருமிகு. மு.ராஜேஸ்வரி சுவி அவர்கள் மற்றும் மரு.அருண் பாண்டியன் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர். [PDF 67KB]
மேலும் பலஉணவகம் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி இன்று(18.05.2026) மாவட்ட நியமன அலுவலர் அவர்களின் தலைமையில் உணவகம் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தல் 60-க்கும் மேற்பட்ட உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.. [PDF 64KB]
மேலும் பலதென்மேற்கு பருவமழை மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026ண்டுக்கல் மாவட்டம் தென்மேற்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 61KB]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 62KB]
மேலும் பலஅனைத்துத்துறை அலுவலர்களுக்கான பாராட்டு விழா.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026-இல் சிறப்பாக பணியாற்றிய அனைத்துத்துறை அலுவலர்களுக்கான பாராட்டு விழா, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 73KB]
மேலும் பலஉயர்கல்வி வழிகாட்டி குழு’க்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026திண்டுக்கல் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவ, மாணவியரையும் உயர்கல்வியில் 100% சேர்க்கை செய்யும் நோக்கில், பள்ளிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கிட மாவட்ட மற்றும் வட்டார அளவில் ‘உயர்கல்வி வழிகாட்டி குழு’க்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. [PDF 157KB]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.05.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 62KB]
மேலும் பலதோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லூரிகளில் சேர இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லூரியில் பயில இணையவழி விண்ணப்பங்கள் விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. [PDF 60KB]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்ட 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்-2026
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2026திண்டுக்கல் மாவட்ட 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2026[PDF 47 KB]
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர்-மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் .
வெளியிடப்பட்ட நாள்: 08/05/20262026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதிவாரம் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. [PDF 41 KB]
மேலும் பலபொது விநியோகத்திட்டம் – குறைதீர் முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2026பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக மே-2026-ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் எதிர்வரும் 09.05.2026 சனிக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. [PDF 45KB]
மேலும் பலபத்ம விருது – 2027 – கலை, இலக்கியம், விளையாட்டு, சமூகசேவை, கல்வி, மருத்துவம்,
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2026கலை, இலக்கியம், விளையாட்டு, சமூகசேவை, கல்வி, மருத்துவம், பொதுவிவகாரம் போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்து வரும் தனிநபர்கள் 2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.PDF [46 KB]
மேலும் பலவாக்குகள் எண்ணுவற்கு நியமிக்கப்பட்ட நுண்பார்வையாளர்களுக்கு வாக்கு எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 03/05/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, வாக்குகள் எண்ணுவற்கு நியமிக்கப்பட்ட நுண்பார்வையாளர்களுக்கு (Counting Micro Observers) வாக்கு எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.PDF [967 KB]
மேலும் பல2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திண்டுக்கல்லில் வாக்கு எண்ணிக்கை மையத் தயார்நிலைகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2026தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 வாக்கு எண்ணிக்கை மையமான திண்டுக்கல் முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். [PDF 51 KB]
மேலும் பலமது விற்பனைக்கு தடை.
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2026தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, வாக்கு எண்ணிக்கை நாள் அன்று மதுபான கடைகள் மூடப்பட்டு இருக்கும். [PDF 44KB]
மேலும் பலNEET (UG)-2026 – நடைபெறும் நாளான 03.05.2026-அன்று தேர்வு மையங்களில் எடுக்கப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/05/2026NEET (UG)-2026 – நடைபெறும் நாளான 03.05.2026-அன்று தேர்வு மையங்களில் எடுக்கப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 66 KB]
மேலும் பல15782 அஞ்சல் வாக்குகளை எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 01/05/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்றைய தினம் வரையில் பதிவான 15782 அஞ்சல் வாக்குகளை எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 60 KB]
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 – வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/05/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்தும், வேட்பாளர்கள் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. [PDF 65 KB]
மேலும் பலமே தினத்தை முன்னிட்டு, மே 1, 2026 அன்று மதுக்கடைகளும், அவற்றுடன் இணைந்த பார்களும் மூடப்பட்டிருக்கும்.
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2026மே தினத்தை முன்னிட்டு, மே 1, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று மதுக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.. [ PDF 44KB]
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/04/2026மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார்.[PDF 55 KB]
மேலும் பலவாக்காளர்கள் வாக்காளர் தகவல் சீட்டு மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு வரும்போது, தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் தகவல் சீட்டுடன் (Voter Information Slip) வாக்காளர் அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து வாக்களிக்கலாம்.. [PDF 55KB]
மேலும் பலவாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கு 230 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வைப்பறையிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (BU, CU, VVPAT) கொண்டு செல்ல ஒதுக்கப்பட்ட 230 வாகனங்களில் இன்று (21.04.2026) ஜி.பி.எஸ் (GPS) கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]
மேலும் பல2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களின் சுழற்சி முறை ஒதுக்கீடு
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான சுழற்சி முறை ஒதுக்கீடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 73KB]
மேலும் பலசைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் தொடர்பான தகவல்களை காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் சைகை மொழி பெயர்ப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் இந்த வசதியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.. [PDF 56KB]
மேலும் பல