மதுபான சில்லறை கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு, தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், 2003 (விதி 12(2))ன்படி உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் (IMFL) சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரை (எப்.எல்.6 தவிர) உரிமம் பெற்ற அனைத்து நிலையங்களும் கீழ்க்குறிப்பிட்ட நாட்களில் […]
மேலும் பலமாவட்டத் தேர்தல் அதிகாரி தேர்தல் பொருட்கள் அனுப்புதலை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட தேர்தல் உபகரணங்களின் அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். [PDF 64KB]
மேலும் பலமனிதச் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (ICDS) சார்பில் நடத்தப்பட்ட மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 14 வட்டாரங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு, 100% வாக்காளர் திரள்பங்கேற்பை வலியுறுத்தினர். [PDF 72KB]
மேலும் பலவீடு தோறும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல்
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி, 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 130-நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகளை வீடு, வீடாக சென்று வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 70KB]
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” – விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026”தித்திக்கும் தேர்தல் திருவிழா” – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 600 மகளிர் சுய உதவிக் குழுவினர் 100% தேர்தல் வாக்குப்பதிவினை வலியுறுத்தி பொங்கல் வைத்து, 26 ரங்கோலி கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 74KB]
மேலும் பலஅஞ்சல் வாக்கு மையங்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 நாளன்று அத்தியாவசிய பணியில் ஈடுபடவிருக்கும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின்சார வாரிய பகிர்மான கழகம், தெற்கு ரயில்வே துறை உள்ளிட்ட 12 அத்தியாவசித் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் 19.04.2026, 20.04.2026 மற்றும் 21.04.2026 ஆகிய மூன்று நாட்கள் அஞ்சல் வாக்கு மையங்களில் (Postal Voting Centre) தங்களது வாக்குகளை செலுத்தலாம். [PDF 58.1 KB]
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVMs) வேட்பாளர்களின் சின்னங்களைப் பொருத்துதல்.
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026எதிர் வரும் 16.04.2026 மற்றும் 17.04.2026 ஆகிய இரண்டு தினங்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொறுத்தும் பணி (Canditate Setting) நடைபெறவுள்ளது. [PDF 58.1 KB]
மேலும் பலவாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் நுண் பார்வையாளர்களின் இரண்டாம் கட்ட குலுக்கல் முறை ஒதுக்கீடு
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026-ஐ முன்னிட்டு, இரண்டாம் கட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சுழற்சியும் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நுண் பார்வையாளர்களுக்கான (Micro Observer) இரண்டாம் கட்ட சுழற்சியும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. [PDF 72KB]
மேலும் பலஆலோசனை கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/04/20262026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கான நடைமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் சமூக ஊடகங்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். [PDF 88KB]
மேலும் பலஆட்சியருடன் ஒரு காபி: முதல்முறை வாக்காளர்களுடனான கலந்துரையாடல்.
வெளியிடப்பட்ட நாள்: 15/04/20262026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, 100% வாக்காளர் பங்கேற்பை உறுதி செய்வதற்கான நோக்கில், ‘Coffee with Collector’ எனும் தலைப்பில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. செ. சரவணன், I.A.S., அவர்கள் தலைமை தாங்கினார் [PDF 70KB]
மேலும் பலசமத்துவ நாள் உறுதிமொழி
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மதுரை (லிமிடெட்), திண்டுக்கல் மண்டலத்தின், சார்பில் பொதுமேலாளர் திரு. M.முத்துகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், சமத்துவ நாள்; உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. [PDF 963KB]
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் வாக்காளர்களுக்கு அழைப்பிதழ்கள், வாக்காளர் தகவல் சீட்டுகள் மற்றும் விழிப்புணர்வு தொகுப்புகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2026மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமானவர் இன்று (12.04.2026) வீடு வீடாக சென்று, வாக்காளர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழங்கள், அழைப்பிதழ்கள், வாக்காளர் தகவல் சீட்டுகள் மற்றும் விழிப்புணர்வு தொகுப்புகள் வழங்கி, வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். [PDF 67KB]
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் (1, 2 மற்றும் 3) ஆகியோருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) இயக்குதல் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமானவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 76KB]
மேலும் பலபறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(06.04.2026) வரையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு. [PDF 140KB]
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் உபகரணங்கள் அனுப்பும் பணிகளை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர் பட்டியல் மற்றும் தேவையான தேர்தல் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும் பணிகள் குறித்து இன்று (10.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். english
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026Ahead of the Tamil Nadu Legislative Assembly General Election 2026, the District Election Officer conducted a direct inspection of a polling station falling under the 133 Vedasandur Assembly Constituency. [PDF 62KB]
மேலும் பலமாவட்ட எல்லைகளில் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களுக்கு சோதனை நடத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றாத தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார். [PDF 67KB]
மேலும் பலமகளிர் சுய உதவிக்குழு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 11/04/20262026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களால் அலைபேசி டார்ச் விளக்குகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி, மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது.. [PDF 70KB]
மேலும் பலபறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(06.04.2026) வரையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு. [PDT 58KB]
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு மற்றும் பிந்தைய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் ஆகியோர்களிடம் தபால் வாக்குப்பதிவு பெறுவதற்காக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் இன்று(09.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. [PDF 58KB]
மேலும் பல7 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடத் தகுதியுள்ள வேட்பாளர்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026<p class="text-justify"திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடத் தகுதியுள்ள வேட்பாளர்களின் விவரங்கள் பின்வருமாறு. [PDF 72KB]
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் பயன்பாட்டிற்காக இரண்டு புதிய மொபைல் செயலிகளை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில்,மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ‘நேயம் (Neyam)’ செயலி மற்றும் தேர்தல் அலுவலர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘VoteAble’ செயலி ஆகிய இரண்டு புதிய மொபைல் செயலிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.[PDF 77KB]
மேலும் பலகுறிப்பிட்ட தேதிகளில் வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிட்டங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 23.04.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது மற்றும் 04.05.2026 அன்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அரசு ஆணை எண் (D) 454, உள் (காவல்-XIII) துறை, நாள் 18.03.2026-ன் படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் வெடிபொருள் கிட்டங்கிகள் 21.04.2026 முதல் 24.04.2026 வரை மற்றும் 02.05.2026 முதல் 04.05.2026 வரை மூடப்பட்டிருக்க வேண்டும். [PDF 46KB]
மேலும் பலநுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 71KB]
மேலும் பல100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 78 KB]
மேலும் பலவாக்குப் பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் சட்டமன்ற தொகுதி வாரியாக எதிர் வரும் 11.04.2026 (சனிக்கிழமை) அன்று பின்வரும் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. [PDF 70KB]
மேலும் பலமாரத்தான் விழிப்புணர்வு ஓட்டப் போட்டி.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, பொதுமக்களிடையே 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டப் போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.[PDF 77KB]
மேலும் பலபறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(06.04.2026) வரையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு. [PDF 57KB]
மேலும் பல7 சட்டமன்ற தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்பு மனுக்கள்
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 30.03.2026 முதல் வேட்பு மனுக்கள் பெறும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, 30.03.2026 முதல் 06.04.2026 (இன்று) வரையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பெறப்பட்ட மொத்த வேட்பு மனுக்களின் விபரம் பின்வருமாறு. [PDF 77KB]
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 – 10 கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவர்களுக்காக ஒரு சுவர் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக சுற்றுச்சுவர்களில் சுற்றுச்சூழல் மற்றும் 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவ, மாணவியர்களுக்கு சுவர் ஓவியப் போட்டி நடைபெற்றது. [PDF 64KB]
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – முதல்முறை வாக்காளர்களுக்காக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, பாளையங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சி.எஸ்.ஐ.அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு முதல் தலைமுறை வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்களிப்பது குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். [PDF 74KB] . .
மேலும் பலபெற்றோர்கள் கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகள் பாதுகாப்பற்ற நீர் நிலைகளுக்கு செல்வதை தடுத்திட வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2026கோடை விடுமுறையின் போது, பாதுகாப்பற்ற நீர்நிலைகளுக்குச் செல்வதிலிருந்து குழந்தைகள் தடுக்கப்பட வேண்டும். [PDF 57KB]
மேலும் பலசட்டமன்றத் தேர்தல் – பெறப்பட்ட வேட்புமனு விவரங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 05/04/202630.03.2026 முதல் 04.04.2026 வரையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பெறப்பட்ட மொத்த வேட்பு மனுக்களின் விபரம் [PDF 77KB]
மேலும் பலமாவட்ட தேர்தல் அதிகாரி எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.04.2026) வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 67 KB]
மேலும் பல03.04.2026 அன்று பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் பறிமுதல் விவரம்.
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(03.04.2026) தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு. [PDF 59 KB]
மேலும் பலமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி திடீர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் பறக்கும் படை (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினர் (SST) இரவில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணிகள் குறித்து இன்று (03.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். [PDF 67 KB]
மேலும் பலபறக்கும் படையினரால் மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் கைப்பற்றிய விவரங்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026ண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(02.04.2026) தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு.[PDF 58KB]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளில் பெறப்பட்ட மொத்த வேட்பு மனுக்களின் விவரங்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் பெறும் பணிகள் 30.03.2026 அன்று தொடங்கியது. அதன்படி, இன்று (02.04.2026) வரையிலாக திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் பெறப்பட்ட மொத்த வேட்பு மனுக்களின் விவரங்கள் பின்வருமாறு உள்ளன.[PDF 76KB]
மேலும் பலதேர்தல் ஆணையம் தேர்தல் கண்காணிப்பாளரை மாற்றியுள்ளதை அறிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026திண்டுக்கல் மாவட்டம் 132-திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி மற்றும் 133-வேதசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான நியமிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் மாற்றத்தின் விவரங்கள்[PDF 53KB]
மேலும் பலஊதியத்துடன் கூடிய விடுப்பு: 135B பிரிவு கீழ் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் 100% வாக்குப்பதிவு உறுதி செய்ய.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், கேரளா, அஸ்ஸாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, 09.04.2026 தேர்தல் நாளில் அவர்களது சொந்த தொகுதியில் சென்று வாக்களிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 135B–ன் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உரிமையாளர்கள் […]
மேலும் பலதேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் அமைந்துள்ள தேவாங்கு (Slender Loris) பாதுகாப்பு மையத்தில், முதல் தலைமுறை கல்லூரி மாணவர் வாக்காளர்களிடம் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் இன்று (02.04.2026) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதவி ஆட்சியர் (பயிற்சி) டாக்டர் ச. வினோதினி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.[PDF 70KB]
மேலும் பலதேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026- பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் கேஸ் சிலிண்டர் விற்பனையாளர் ஆகியோர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான கூட்டம்.[PDF 414 KB]
மேலும் பலசட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்குச்சாவடி ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 132-திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.[PDF 63 KB]
மேலும் பலசட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்களிப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு மாரத்தான் நிகழ்வு.
வெளியிடப்பட்ட நாள்: 02/04/20262026 Legislative Assembly General Election – A marathon event to promote voting[PDF 66KB]
மேலும் பலசட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – தேர்தல் தொடர்பாக நடந்து வரும் செலவினங்கள் குறித்த ஆய்வு கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – தேர்தல் தொடர்பாக நடந்து வரும் செலவினங்கள் குறித்த ஆய்வு கூட்டம். [PDF 413 KB]
மேலும் பலபறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம். [PDF 58 KB]
மேலும் பலசட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.(மகளிர் திட்டம்).
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி திருநங்கையர் காலனியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. [PDF 65 KB]
மேலும் பலபறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம். [PDF 58 KB]
மேலும் பலதிண்டுக்கல் 7 தொகுதிகளுக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – திண்டுக்கல் மாவட்டத்தின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான பெறப்பட்ட வேட்பு மனுக்கள். [PDF 74 KB]
மேலும் பல