மாண்புமிகு அமைச்சர் கற்றல் கற்பித்தல் கூடம் மற்றும் கிராம அறிவு மையத்தை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2026
மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள், சமூகநீதித் துறையின் சார்பில், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நூத்தலாபுரம் அரசு சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதியில் ரூ.47.88 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கற்றல் கற்பித்தல் கூடத்தையும் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அழகர்நாயக்கன்பட்டியில் ரூ.127.49 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிராம அறிவு மையத்தையும் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். [PDF 97KB]
