மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம்” 04.03.2024 அன்று துவங்கி வைக்கப்பட்டது.

வெளியிடப்பட்ட தேதி : 14/06/2024

செ.வெ.எண்:-17/2024

நாள்:-10.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

நத்தம், வேடசந்துார், குஜிலியம்பாறை, திண்டுக்கல் மேற்கு, ஆத்துார், திண்டுக்கல் கிழக்கு, கொடைக்கானல் ஆகிய வட்டங்களில் “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம்” மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம்” 04.03.2024 அன்று துவங்கி வைக்கப்பட்டது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ”நத்தம், வேடசந்துார், குஜிலியம்பாறை, திண்டுக்கல் மேற்கு, ஆத்துார், திண்டுக்கல் கிழக்கு, கொடைக்கானல்” ஆகிய வட்டங்களில் இந்த நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் இணையதளம் Citizen Portal (https://tamilnilam.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பிக்கலாம். அதனடிப்படையில், நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணையவழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நத்தம் பட்டா வழங்கப்படும். மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை (https://eservices.tn.gov.in) என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

“நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் ”நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் இணையதளம் வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். எனவே, திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.