மூடு

”ஜீவன் ரக் ஷா விருது ” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 24/06/2024

செ.வெ.எண்:-48/2024

நாள்:-22.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

”ஜீவன் ரக் ஷா விருது ” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் வீரத்துடனும், துணிச்சலுடன் போராடி மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ”ஜீவன் ரக் ஷா விருது” என்ற பெயரில் சர்வோதம் ஜீவன் ரக் ஷா விருது, உத்தம் ஜீவன் ரக் ஷா விருது மற்றும் ஜீவன் ரக் ஷா விருது போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜீவன் ரக் ஷா விருது எனக் குறிப்பிட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (அருகில்) தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் –624 004 என்ற முகவரியில் 28.06.2024-க்குள் 3 பிரதிகளுடன் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு 7401703504 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.