மூடு

‘பத்ம விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 02/07/2024

செ.வெ.எண்:-49/2024

நாள்:-23.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

‘பத்ம விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம விருது” என்ற பெயரில் பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று விருதுகள் வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த, சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. அதில் விளையாட்டு துறை சார்பாக பத்ம விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

அதன்படி, இந்திய அரசின் சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர முக்கிய விவரங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் நேரடியாக 15.09.2024-க்குள் உரிய ஆவணங்களுடன் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (அருகில்) தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் – 624004 மற்றும் 7401703504 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.