மூடு

“மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் 11.07.2024 முதல் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 13/07/2024

செ.வெ.எண்:-22/2024

நாள்:-09.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

“மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் 11.07.2024 முதல் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 11.07.2024 அன்று துவக்கப்பட உள்ளது. ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் திண்டுக்கல் மாவட்டத்தில், 306 கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் வருகிற 11.07.2024 முதல் 23.08.2024 வரை 23 நாட்கள் 68 முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மருத்துவத்துறை, மாவட்ட தொழில் மையம், பால்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் / பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை, பொது மேலாளர்(முன்னோடி வங்கி), மற்றும் மகளிர் திட்டம் ஆகிய 22 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் இச்சிறப்பு முகாம்களில் பெறப்பட உள்ளது. பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 தினங்களுக்குள் தகுதியின் அடிப்படையில் தீர்வு வழங்கப்படும்.

அதனடிப்படையில் 11.07.2024 அன்று ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், என்.பஞ்சம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியிலும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தோப்புப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியிலும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 16.07.2024 அன்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், நத்தம் ஊராட்சி ஒன்றியம், கோசுகுறிச்சி ஊராட்சி, பிள்ளையார்நத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், கல்வார்பட்டி ஊராட்சி, கல்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 18.07.2024 அன்று ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், குருநாதநாயக்கனூர் ஊராட்சி, குருநாதநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், காட்டகாமன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வீரலபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 19.07.2024 அன்று பழனி ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பட்டி அரசு உயர்நிலைபப்பள்ளியிலும், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், உள்ளியக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், பூலத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.