மூடு

தையல் இயந்திரங்கள் வழங்கிட முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், மத்திய / மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2024

செ.வெ.எண்:-26/2024

நாள்:-10.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

தையல் இயந்திரங்கள் வழங்கிட முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், மத்திய / மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், மத்திய / மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று அதன் வாயிலாக பொருளுதவி (இலவச தையல் இயந்திரம்) பெறாதவர்கள், பயிற்சி முடித்த ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலத்தில் விண்ணப்பம் சமர்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.