மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் சிசிடிவி கேமரா கட்டுப்பா
செ.வெ.எண்:-66/2025
நாள்:-16.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (16.09.2025) பழனி நகராட்சி வ.உ.சி பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 300 சிசிடிவி கேமரா மற்றும் கட்டுப்பாட்டு அறையினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
மேலும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பழனி நகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் பழனி வ.உ.சி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பழனிக்குச் வந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், குற்றச் செயல்கள் நடைபெறாமல் கண்காணிப்பிற்காகவும் புதிதாக அமைக்கப்பட்ட பழனி காவல் உதவி மையத்தினை (புறக்காவல் நிலையம்) திறந்து வைத்தார்கள்.
முன்னதாக பழனி பெரிய பள்ளிவாசல் அருகில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர மின்விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப்,இ.கா.ப., அவர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர் (பழனி உட்கோட்டம்) ஸ்ரீ.தனஞ்செயன், பழனி நகர் மன்ற தலைவர் திருமதி ஆர்.உமா மகேஸ்வரி, துணை தலைவர் திரு.கே.கந்தசாமி மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.