மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண
செ.வெ.எண்:-21/2025
நாள்:11.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மார்க்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்று, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் வழங்கியமைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு இன்று(11.10.2025) சிறப்புரை ஆற்றினார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மார்க்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்று, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் வழங்கியமைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இக்கிராமசபைக் கூட்டத்தில் கிராம மக்களின் மூன்று அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறுதல். இழிவுப்படுத்தும் பொருள் தரும் சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள், தெருக்கள் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களின் பெயரை மாற்றுதல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வரவு செலவு மற்றும பணி முன்னேற்ற அறிக்கை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி முன்னேற்ற அறிக்கை, தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், அனைத்து வகையான தொழில்களில் குழந்தைகளும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரும் இல்லை, தாயுமானவர் திட்ட கணக்கெடுப்பு மற்றும் மக்கள் நிலை ஆய்வு, கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம், சபாசார் செயலி செயல்பாடுகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாகவும், பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இக்கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கிராமத்திற்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து தெரிவித்தனர். மேலும், பல்வேறு கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களாக குறைகளை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து தமிழக மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக நகர்புற மக்களுக்கு இணையாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனை செயல்படுத்தி வருகிறார்கள்.
பொதுவாக கிராமப்புறத்தில் அடிப்படை தேவைகளான தெருவிளக்கு, சுகாதாரம், கல்வி என அனைத்து தேவைகளையும் செய்துதர வேண்டியது ஒரு உள்ளாட்சியின் குறிக்கோளாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமபுறங்களும், நகர்புறங்களும் அதிக வளர்ச்சி அடைய வேண்டும் என்று பாடுபட்டுகொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் அனைத்து நிலைகளிலும் சிறப்பாக பணியாற்றக்கூடிய முதலமைச்சராக நம்முடைய தமிழக முதலமைச்சர் அவர்கள் திகழ்ந்து வருகிறர்கள்.
அக்டோபர் 02–ந் தேதி அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டம், ஆயுத பூஜையின் காரணமாக இன்று(11.10.2025) கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது.
மேலும், பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 முதல் ரூ.1000 வரை சேமிப்பு ஏற்படுகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் கேதையுறும்பு ஆகிய பகுதியில் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2 இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுக்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 20.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 52 மாதங்களில் 3,000 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் மொத்தம் 65,279 குடும்ப அட்டைகள் உள்ளன. தற்போது, 100 முழு நேர நியாயவிலைக்கடைகளும், 87 பகுதி நேர நியாயவிலைக்கடைகளும் என மொத்தம் 187 நியாயவிலைக்கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி நேர நியாயவிலைக்கடைகளில் POS வைக்கப்படவுள்ளது.
ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டிற்கே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 20 இலட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று இன்னுயிர் காக்கும் 48 திட்டத்தின்கீழ் அரசு அங்கிகரிக்கப்பட்ட 480 தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை 250 ஆகிய 730 மருத்துவமனைகளில் சாலை விபத்துகளில் சிக்கியவர்களை சேர்க்கப்பட்டால் 48 மணி நேரம் சிகிச்சைக்கு மேற்கொள்ள செலவாகும் தொகையை அரசு ஏற்றுக்கொள்ளும்.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
அதனைத்தொடர்ந்து, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் மார்க்கம்பட்டி மகரந்த பூக்கள் மகளிர் சுய உதவிக்குழு ரூ.70,000 மதிப்பிலான நுண் நிறுவன கடனுதவிகள், ஒம் சக்தி மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.70,000 நுண் நிறுவன கடனுதவிகள் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மார்க்கம்பட்டி ஸ்ரீதுர்க்கா மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.20.80 இலட்சம் மதிப்பில் வங்கி கடன் இணைப்பு, ஸ்ரீகாமாட்சி அம்மன் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.7.50 இலட்சம் மதிப்பில் வங்கி கடன் இணைப்பு, இசை மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதி, மலர்கள் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதி என மொத்தம் ரூ31.70 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, எல்லைப்பட்டி ஊராட்சி துறையூர் கிராமத்தில் ரூ.9.32 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார், மேலும், மார்க்கம்பட்டி ஊராட்சி மாம்பாறை- ராயக்காவலசு சாலை முதல் பொட்டைகரட்டு குளம் வரை ரூ.26.88 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள், மார்க்கம்பட்டி ஊராட்சி – ராகவநாயக்கன்பட்டி தார்சாலை முதல் பெருமாள்மலை மேற்கு அடிவாரம் வரை ரூ.39.76 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி ஆகிய பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை துவக்கி வைத்தார்.
இக்கிராமசபை கூட்டத்தில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு.பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபுபாண்டியன், திரு.காமராஜ், மாவட்ட செயல் அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) திருமதி பி.சுதாதேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்(ஒட்டன்சத்திரம்) திருமதி.மா.அமுதகலா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.