மூடு

பாலின வள மைய மேலாளரிடம் இலவச தொலைபேசி இணைப்பின் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 10/11/2025

செ.வெ.எண்:-36/2025

நாள்: 10.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

பாலின வள மைய மேலாளரிடம் இலவச தொலைபேசி இணைப்பின் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் முதற்கட்டமாக பாலின வள மையம் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்திலும், இரண்டாம் கட்டமாக குஜிலியம்பாறை, நிலக்கோட்டை மற்றும் வடமதுரை ஆகிய வட்டாரங்களிலும் தற்போது முன்றாம் கட்டமாக ஆத்தூர், திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல், நத்தம், ஒட்டன்சத்திரம், பழநி, சாணார்பட்டி, தொப்பம்பட்டி, வேடசந்தூர் ஆகிய வட்டாரங்களிலும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மேலும், பாலின மையங்களில் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை களையவும், வழக்கறிஞர் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து செயல்படவும், பெண்கள் மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் சமூக தடைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் பாலின வள மையங்கள் செயல்பட்டு வருகிறது.

மேலும், பாலின வள மையத்தில் புகார்கள் தெரிவிக்க இலவச தொலைபேசி இணைப்பு உள்ளது. ரெட்டியார்சத்திரம் – 0451-2400195, குஜிலியம்பாறை-04551-293606, நிலக்கோட்டை-04543-293588 மற்றும் வடமதுரை-04551-294699, ஆத்தூர் 0451-2911823, திண்டுக்கல் 0451-2999603, வத்தலக்குண்டு 04543-293285, கொடைக்கானல் 04542-243188, நத்தம் 04544-244831, ஒட்டன்சத்திரம் 04545-293405, பழநி 04545-242180, சாணார்பட்டி 0451-2911681, தொப்பம்பட்டி 04545-293312, வேடசந்தூர் 04551-261700. இம்மையத்தில் பதிவு செய்யப்படும் பாலினம் தொடர்பான குற்றப்புகார்கள் சமூக நலத்துறையின்கீழ் இயங்கிவரும் OSF மையத்திற்கு தொடர் நடவடிக்கைக்காக உரிய தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும், பாலின வள மைய மேலாளரிடம் பெண்கள், குழந்தைகள், குழந்தை திருமணம் மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.