மூடு

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட கல்வியியல் கல்லூரியில் பணிபுரியத்தக்க உதவி பேராசிரியர்களுக்கான தேர்வினை திண்டுக்கல் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 906 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித் தலைவர் தி

வெளியிடப்பட்ட தேதி : 29/12/2025
.

செ.வெ.எண்:-71/2025

நாள்:-27.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட கல்வியியல் கல்லூரியில் பணிபுரியத்தக்க உதவி பேராசிரியர்களுக்கான தேர்வினை திண்டுக்கல் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 906 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட கல்வியியல் கல்லூரியில் பணிபுரியத்தக்க உதவி பேராசிரியர்களுக்கான தேர்வினை திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (27.12.2025) அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, புனிதவளனார் பெண்கள் மேனிலைப் பள்ளி, ஜான்பால் மேனிலைப் பள்ளி மற்றும் அசியுதா மெட்ரிக் மேனிலைப் பள்ளி உள்ளிட்ட 4 தேர்வு மையங்களில் 906 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.

தொடர்ந்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாவட்ட கல்வியியல் கல்லூரியில் பணிபுரியத்தக்க உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு மையமான புனித வளனார் பெண்கள் மேனிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.12.2025) பார்வையிட்டார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாவட்ட கல்வியியல் கல்லூரியில் பணிபுரியத்தக்க உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்விற்கு 990 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். 906 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரிந்துள்ளனர். 84 பேர் தேர்வுக்கு வருகை தரவில்லை. (PWD CANDIDATES) கூடுதல் சலுகை நேரம் கோரி 35 பேர் விண்ணப்பித்து இருந்தனர் மற்றும் 9 பேர் (SCRIBE CANDIDATES) (தேர்வர்கள் சொல்வதை எழுதுபவர் கோரி விண்ணப்பித்து இருந்தனர். இத்தேர்வர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டுள்ளது.

இத்தேர்வினை நல்ல முறையில் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பிற துறைகளும் இணைந்து தேர்வர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, அவசரகால மருத்துவ உதவி, தடையில்லா மின்சார வசதி, சுகாதரம், தீயணைப்பு துறையின் பாதுகாப்பு வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வர்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு எழுத ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. மந்தன கட்டுக்கள் காவல்துறை பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு வழித்தட அலுவலர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

மேலும், மாவட்ட வருவாய் அலுவலர், பள்ளிக் கல்வித்துறை கண்காணிப்பு அலுவலராக உள்ள இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் இணைந்து அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வுப் பணிகள் நன்முறையில் செயல்படும் வகையில் கண்காணித்து வருகின்றனர்.

தொடர்ந்து, நிலையான படை உறுப்பினராக இரண்டு ஆசிரியர்கள் ஒவ்வொரு தேர்வுமையத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் இத்தேர்விற்காக தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் என மொத்தமாக 150 பேர் தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் உள்ள தேர்வர்கள் அனைவரும் தேர்வினை நன்முறையில் எழுத மாவட்ட நிர்வாகத்தினால் சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தேர்வு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.