ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள் ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
செ.வெ.எண்:-55/2025
நாள்:-15.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள் ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் மற்றும் பி.எஸ்.சி நர்சிங் (B.Sc Nursing), பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ (GNM Diploma), பி.இ (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்), பி.இ(பயோமெடிக்கல் இன்ஜினியரிங்), பி.இ (மின் மற்றும் மின்னணு பொறியியல் (EEE) & பி.டெக். தகவல் தொழில்நுட்பம்( B.Tech IT) ஆகியபடிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். மேலும் வயது 21 முதல் 35 வரை நிரம்பியிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள்ளும் இருக்கவேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு ஒன்பது மாதமும் விடுதியில் தங்கிபடிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில் பணிபுரியவும் ஆரம்பகால மாதஊதியமாக ரூ.2,50,000/- முதல் ரூ.3,00,000/- வரை வருவாய் ஈட்டவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.