தேர்தல் விழிப்புணர்வு குறித்த போட்டி – பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல்.
வெளியிடப்பட்ட தேதி : 24/01/2026
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 16-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு குறித்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு இன்று (23.01.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன், திண்டுக்கல் மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.சு.பா.கார்த்திகேயன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு.சிற்றரசு அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்.


