மூடு

பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 04/11/2025

செ.வெ.எண்:-07/2025

நாள்:-03.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை குளங்களான பழனி தாலுகாவில் அமைந்துள்ள பங்காருசமுத்திரக்குளம் மற்றும் பாறைசின்னக்குளம் ஆகிய 2 குளங்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஏதுவாக மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியில் காணலாம்.

தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல்-624001 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். மேலும், தகவலுக்கு தொலைபேசி : 0451-2900148, கைபேசி எண் : 97516 64565 மற்றும் 99946 87689 மின்னஞ்சல்:adfdglinl1@gmail.com தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மாற்றங்கள் ஏதேனுமிருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.